Tuesday, October 25, 2022

ரூத் (Ruth Helps Naomi), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 15

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 15

ரூத்

எலிமெலேக்கும், நகோமியும் இஸ்ரவேல் தேசத்திலுள்ள பெத்லெகேம் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு மக்லோன், கிலியோன் என்று இரு மகன்கள் இருந்தார்கள். ஒருமுறை பெத்லெகேமிலே பஞ்சம் உண்டாயிருந்தது. பஞ்சம் ஏற்பட்டால் உண்ணுவதற்கு உணவு கிடைக்காது. உணவு பயிர்கள் செழிப்பாக வளருவதற்கு மழை மிகவும் அவசியம். ஆகவே மழை சரியாக பெய்யாவிட்டால், உணவுபயிர்கள் நன்றாக வளரமுடியாமல் உணவு பற்றாக்குறை ஏற்படும்.  பெத்லெகேமில் பஞ்சம் ஏற்பட்டபடியால் எலிமெலேக்கும், நகோமியும் தங்கள்  பிள்ளைகளோடுகூட மோவாப் என்கிற தேசத்திற்கு சென்றார்கள்.

அங்கு அவர்கள் தங்கியிருக்கும்பொழுது எலிமெலேக்கு இறந்து போனார். அதன்பின்னர் மக்லோனும், கிலியோனும் மோவாப் தேசத்தை சேர்ந்த ஓர்பாள், ரூத் என்கிற பெண்களை திருமணம் செய்து கொண்டார்கள். கொஞ்சம் வருடங்கள் கழித்து மக்லோனும், கிலியோனும் கூட இறந்து போனார்கள்.

ஒருநாள் நகோமி, தன்னுடைய சொந்த ஊராகிய பெத்லெகேமிலே பஞ்சம் முடிவிற்கு வந்துவிட்டதென்று கேள்விப்பட்டு அங்கு திரும்பி செல்லுவதென்று முடிவெடுத்தாள். நகோமி, ஓர்பாள், ரூத் ஆகிய இருவரையும் அழைத்து, அவர்களுடைய பெற்றோரிடத்திற்கு திரும்பி செல்லுமாறு அறிவுரை கூறினாள். ஓர்பாள் சிறிது நேரம் சிந்தித்து தன்னுடைய உறவினர்களிடம் திரும்பி சென்றாள். 

ஆனால்  ரூத்தோ தன்னுடைய மாமியாரோடு கூட செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஆகவே அவளும் நகோமியோடு சேர்ந்து பெத்லெகேமிற்கு சென்றாள். அப்பொழுது பெத்லெகேமிலே அறுவடை காலம் நடந்து கொண்டிருந்தது. பயிர்கள் வளர்ந்து, விளையும்பொழுது, அதை அறுவடை செய்வார்கள். அப்படி அறுவடை செய்யும்பொழுது சில தானியங்கள் தரையிலே விழும். அந்த தானியங்களை ஏழைமக்கள் எடுத்துக் கொள்ளும்படியாக விட்டுவிடுவார்கள். ஆகவே ரூத் அங்கு உள்ள ஒரு வயலிலே தானியங்களைப் பொறுக்கி உணவு சேசரிக்கும்படியாக சென்றாள்.

ரூத் தானியங்களை பொறுக்கின வயல் நிலம், அவளுடைய மாமனாரான எலிமெலேக்கின் உறவினர் ஒருவருடையதாக இருந்தது. அவருடைய பெயர் போவாஸ். போவாஸ் ரூத்தின் நல்லகுணங்களைப் பற்றி கேள்விப்பட்டதால் அவளை அன்பாக நடத்தினார். சிறிது காலம் கழித்து போவாஸ் ரூத்தை திருமணம் செய்தார். ரூத்தும், போவாஸும் மற்றவகளிடம் அன்பு செலுத்தி, உதவிகளை செய்ததால் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

வேதபகுதி: ரூத் புஸ்தகம்

மனப்பாட வசனம்: எபேசியர் 4:32

 

 

No comments:

Post a Comment

சாலொமோன் ராஜா கட்டின தேவாலயம் (King Solomon Builds the Temple of God), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

இளநிலை வகுப்பு (JUNIOR)  வயது :  10 - 11  வயது வகுப்பு :  V  & V I இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்...