Wednesday, June 12, 2024

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதுஇதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோவிற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 17

தாவீது என்ற ஆட்டுஇடையச் சிறுவன்

இஸ்ரவேல் தேசத்தின் பெத்லெகேம் என்ற பட்டணத்திலே தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். தாவீது எல்லாரிலும் இளையவன். தாவீதிற்கு ஆண்டவர்மேல் மிகுந்த பக்தி இருந்தது. ஆண்டவர் எப்பொழுதும் தன்னோடு கூடவே இருக்கிறார் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்ததினால் எதற்கும் பயப்படாத தைரியசாலியாய் இருந்தான்.

தாவீதின் தந்தை அவனுடைய பொறுப்பிலே சில ஆடுகளைக் கொடுத்திருந்தார். அவன் அந்த ஆடுகளுக்கு உணவு கொடுப்பதற்காக வயல்வெளியிலே மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும். சில நேரங்களில் இரவுவேளைகளில் கூட அங்கு தங்க வேண்டியது வரும்.

தாவீது தன்னுடைய ஆடுகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தான். தாவீது தன்னுடைய ஆடுகளை மேய்க்கும்பொழுது, சில வேளைகளில் சிங்கம், கரடி போன்ற கொடிய மிருகங்கள் ஆடுகளை பிடிப்பதற்காக வரும். அவைகள் பதுங்கியிருந்து பாயும். ஆகவே தாவீது எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தாவீது தன்னுடைய ஆடுகளை காட்டு மிருகங்கள் பிடித்துக்கொண்டு செல்லுவதற்கு ஒருபொழுதும் அனுமதிக்கவில்லை. ஒருமுறை சிங்கமும், இன்னொருமுறை கரடியும் அவனுடைய ஆட்டை பிடித்தபொழுது, அவன் அவைகளை துரத்திச் சென்று அடித்து, தன்னுடைய ஆடுகளை அவைகளின் வாயிலிருந்து காப்பாற்றினான்.

தாவீது சுரமண்டலம் என்கிற இசைக்கருவியை நன்கு வாசிக்க பழகியிருந்தான். அவன் எப்பொழுதும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தான். அவன் எழுதிய பாடல்களை பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சங்கீதம் என்ற புஸ்தகத்தில் வாசிக்கலாம். தாவீது தன்னைப் பாதுகாக்க தனக்கும் ஒரு மேய்ப்பர் இருக்கிறார் என்று அறிந்திருந்தான்.

ஒருமுறை கோலியாத் என்கிற அரக்கன் இஸ்ரவேலரை பயமுறுத்தினான். அவனை தாவீது ஒரு கவண்கல்லினால் வீழ்த்தினான். தாவீது ஆண்டவருக்கு விருப்பமானதை எப்பொழுதும் செய்தான். 

சிலமுறை அவன் தவறுகள் செய்தபொழுதும் ஆண்டவரிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டான். அவன் வளர்ந்து பெரியவனானபொழுது ஆடு மேய்த்த சிறுவனான தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக ஆண்டவர் மாற்றினார்.

வேதபகுதி: I சாமுவேல், 2 சாமுவேல்

மனப்பாட வசனம்: கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன் (சங்கீதம் 89:1a)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/


No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...