Saturday, April 18, 2020

ஆபிரகாம் தேவனால் சோதிக்கப்படுதல் (God Tests Abraham), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 2

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 2

ஆபிரகாம் தேவனால் சோதிக்கப்படுதல்

ஆபிரகாம் “விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கப்படுகிறார். அதின் காரணம் என்ன என்று தெரியுமா?

ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் அவர்களுடைய வயதான காலத்திலே ஈசாக்கு என்கிற ஒரு மகன் பிறந்தான். தம்முடைய வார்த்தைகளுக்கு ஆபிரகாம் கீழ்ப்படிவாரா என்று சோதிக்க தேவன் விரும்பினார். ஒருநாள் தேவன் ஆபிரகாமிடம், அவருடைய ஒரே மகன் ஈசாக்கைக் கூட்டிக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே உள்ள மலைகள் ஒன்றில் அவனை பலியிடும்படி கூறினார். ஆபிரகாம் சற்றும் தயங்காமல் தேவனுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிய முற்பட்டார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

அடுத்த நாள், விடியற்காலமே ஆபிரகாம் எழுந்து, தன்னுடைய கழுதையின் மேல் சேணம் கட்டி, பலிக்குத் தேவையான விறகுகளையும் எடுத்துக் கொண்டார். தன்னுடைய மகனான ஈசாக்கையும், தன்னுடைய வேலைக்காரர்களில் இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு மோரியா தேசத்துக்குப் புறப்பட்டார். 

Sweet Publishing / FreeBibleimages.org.
மூன்று நாள் பிரயாணம் செய்தபின், தேவன் சொன்ன இடத்தைத் தூரத்திலே பார்த்தார். அப்பொழுது அவர் தன்னுடைய வேலைக்காரரை அங்கேயே நிற்க வைத்துவிட்டு, விறகையும் கத்தியையும் எடுத்துக் கொண்டார். தன்னுடைய மகன் ஈசாக்கை மாத்திரம் கூட்டிக் கொண்டு, மலையின் மேல் ஏறிப் போனார்.

Sweet Publishing / FreeBibleimages.org. 

அவர்கள் மலையின் மேல் ஏறிப் போகும் பொழுது ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “பலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான். அப்பொழுது ஆபிரகாம் ஈசாக்கைப் பார்த்து, தம்முடைய பலிக்கான ஆட்டுக்குட்டியை தேவனே கொடுப்பார் என்று கூறினார். பின்னர் அவர்கள் தேவன் ஆபிரகாமுக்கு காட்டின இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஆபிரகாம் அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினார். 

Sweet Publishing / FreeBibleimages.org.
பின்னர் ஈசாக்கையே பலிப்பொருளாகக் கட்டி அந்த பலிபீடத்தில் கிடத்தினார். அவர் கத்தியை எடுத்து, ஈசாக்கை பலி செலுத்த முயலும் பொழுது, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. அது ஈசாக்கை பலி செலுத்த வேண்டாம் என்றும், தன்னுடைய ஒரே மகனையே தேவனுக்கென்று பலி செலுத்த ஆபிரகாம் ஒப்புக் கொண்டபடியால், அவர் உண்மையாகவே தேவனுக்குப் பயப்படுகின்ற மனிதன் என்றும் தேவன் கூறினார்.
Sweet Publishing / FreeBibleimages.org.

ஆபிரகாம் அங்கே ஒரு புதரிலே, கொம்புகள் சிக்கியிருந்த ஒரு ஆட்டுக் கடாவைப் பார்த்தார். அவர் அதை பிடித்துக் கொண்டு வந்து, தன்னுடைய மகனுக்குப் பதிலாக பலியிட்டார். ஆபிரகாம் அந்த இடத்துக்கு “யேகோவா யீரே” என்று பெயரிட்டார். அதற்கு “கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று அர்த்தம், அதாவது நமக்குத் தேவையானதைக் கர்த்தர் கொடுப்பார் என்பது தான் அதன் பொருள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்து, அவனுடைய வம்சத்தினர், வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல எண்ணற்றவர்களாய் இருப்பார்கள் என்று வாக்கு கொடுத்தார். அந்த வாக்கின்படியே இன்று மத்திய கிழக்கு நாடுகள் பல, ஆபிரகாமின் வம்சாவளியை சேர்ந்தவர்களாய் இருக்கிறார்கள். இப்படி ஆபிரகாம் தேவனை சற்றும் சந்தேகிக்காமல், முழுமையாக விசுவாசித்தபடியால் தான் அவரை “விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கின்றோம்.

வேத பகுதி: ஆதியாகமம் 22: 1-19

மனப்பாட வசனம்: நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. (உபாகமம் 6:5)


கேள்வி பதில்  

1.     விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படுவது யார்?

………………………………………

2.    ஈசாக்கை தேவன் எந்த தேசத்தில் உள்ள மலைக்கு அழைத்து கொண்டு போக சொன்னார்? .…………………………….

3.    பலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டது யார்?

………………………………….

4.    ஆபிரகாம் எதிலே கொம்புகள் சிக்கியிருந்த ஆட்டுக் கடாவைப் பார்த்தார்? …………………………………..

5.    ஆபிரகாம் ஆட்டுக்கடாவை பலியிட்ட இடத்திற்கு என்ன பெயரிட்டார்? ……………………………….

 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்

1.    ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த மகன்

அ) மோசே                 ஆ) ஈசாக்கு            இ) யோசேப்பு

 2. ஆபிரகாம் எதில் பிரயாணப்பட்டு போனார்?

      அ) ஒட்டகம்               ஆ) குதிரை             இ) கழுதை

 3. ஆபிரகாம் பலிபீடத்தைக் கட்டி யாரை கிடத்தினார்?

      அ) ஆடு                      ஆ) கழுதை             இ) ஈசாக்கு

4. ஆபிரகாம் கேட்ட சத்தம் எங்கிருந்து உண்டானது?      

      அ) புதர்                         ஆ) வானம்             இ) மலை

5. யெகோவா யீரே என்றால் ………………. பர்வதத்திலே

     பார்த்துக்கொள்ளப்படும்      

     அ) மோரியா              ஆ) ஓரேப்                 இ) கர்த்தருடைய




Monday, April 6, 2020

ஏவாள் பாம்பினால் வஞ்சிக்கப்படுதல் (The Serpent Deceives Eve), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 2

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY )

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 2

ஏவாள் பாம்பினால் வஞ்சிக்கப்படுதல்

 

தேவன் முதல் மனிதர்களான ஆதாமையும், ஏவாளையும் படைத்து, அவர்களை ஏதேன் என்கிற அழகான தோட்டத்திலே வைத்தார். அந்த தோட்டத்தில் மிகவும் அழகான பூக்கள், குளுமையான நீரோடைகள் மற்றும் எல்லா வகையான மிருகங்கள், பறவைகளும் இருந்தன. அதுமட்டுமல்லாமல், அதில் இனிமையான பழங்களைக் கொடுக்கும் அனைத்து வகை மரங்களும் நிறைந்திருந்தன. அந்த தோட்டத்தை நல்ல விதத்தில் பராமரிக்குமாறு தேவன் ஆதாமிடம் கூறினார்.


Sue Bentley / FreeBibleimages.org.

அந்த தோட்டத்தின் நடுவில் இரண்டு விசேஷமான (சிறப்பான) மரங்கள் இருந்தன. ஒரு மரத்தின் பெயர் “ஜீவ விருட்சம்”; இன்னொரு மரத்தின் பெயர் “நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்”. விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். ஜீவ விருட்சம் என்கிற மரத்தின் பழத்தை சாப்பிட்டால் சாவே இல்லாமல் என்றென்றைக்கும் வாழலாம். இந்த பழத்தை வேதாகமத்தில் “ஜீவ விருட்சத்தின் கனி” என்று சொல்லப்பட்டிருக்கிறது. கனி என்றால் பழம் என்று அர்த்தம். தேவன் அவர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லா விதமான பழங்களையும் சாப்பிடலாம், ஆனால் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் அதை சாப்பிடுகிற நாளிலே சாக நேரிடும்” என்று கூறினார்.

Sue Bentley / FreeBibleimages.org.

அந்த தோட்டத்தில் இருந்த பாம்பு மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது. பாம்பிற்கு சர்ப்பம் என்கிற பெயரும் உண்டு. பாம்பு ஏவாளிடம், ‘நீங்கள் இந்த பழத்தை சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்’ என்று சொல்லி அவளை ஏமாற்றினது. ஏவாள் பாம்பின் வார்த்தையை நம்பி பழத்தை பறித்து சாப்பிட்டு விட்டு, ஆதாமுக்கும் அதைக் கொடுத்தாள்.

Sue Bentley / FreeBibleimages.org.

ஆதாமும், ஏவாளும் தேவன் அவர்களிடம் சொன்ன வார்த்தையை மீறி நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் பழத்தை சாப்பிட்டபடியால் பாவம் செய்தார்கள். அவர்கள் மிகவும் வெட்கப்பட்டு, ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள். ஆனால் ஆதாமும், ஏவாளும், தாம் கொடுத்த கட்டளையை மீறினதை தேவன் அறிந்திருந்தார். ஆகவே அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார். ஆதாமும், ஏவாளும், அவர்களை ஏமாற்றிய பாம்பும் தேவனிடம் தண்டனையையும் பெற்றார்கள். ஆகவே நாம் யாருடைய சத்தத்தைக் கேட்கிறோம், யாருக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். 

Sue Bentley / FreeBibleimages.org.

வேத பகுதி: ஆதியாகமம் 2: 15–17; 3:1-24

மனப்பாட வசனம்: பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23). 

பாடப் பயிற்சிகள்

(குழந்தைகளுக்கு எழுதுவதில் சிரமம் இருந்தால் வாய்மொழி பயிற்சியாக செய்யலாம்)

பாடப் பயிற்சிகள்

(குழந்தைகளுக்கு எழுதுவதில் சிரமம் இருந்தால் வாய்மொழி பயிற்சியாக செய்யலாம்)

கேள்வி பதில்:

1.   ஆதாமும், ஏவாளும் வசித்த தோட்டத்தின் பெயர் என்ன? ......................

2.   தோட்டத்தின் நடுவே எத்தனை விசேஷமான மரங்கள் இருந்தன? ......................

3.   ஏவாளை ஏமாற்றினது யார்? .......................

4.   ஏவாள் பழத்தை சாப்பிட்டுவிட்டு யாருக்குக் கொடுத்தாள்?    .......................

5.   ஆதாமும் ஏவாளும் தேவனால் தண்டிக்கப்பட்டார்களா? ............


காலியான இடத்தை நிரப்பவும்:

1.    தோட்டத்தை நல்ல விதத்தில் பராமரிக்குமாறு தேவன் …………………………………. கூறினார்.

2.    ………………………………………. அறியத்தக்க மரத்தின் பழத்தை மாத்திரம் சாப்பிட வேண்டாம் என்று தேவன் கூறினார்.

3.    அந்த தோட்டத்தில் இருந்த …………………………. மிகவும் தந்திரமுள்ளதாயிருந்தது.

4.    பாம்பு ஏவாளிடம் “நீங்கள் இந்த பழத்தை சாப்பிடும் நாளில் உங்கள் …………………………….திறக்கப்படும் என்று சொன்னது.

5.    தேவன் ஆதாமையும் ஏவாளையும் ……………………………. தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார்.




Wednesday, April 1, 2020

ஆண்டவர் உலகத்தைப் படைத்தார் (God Created This World), பாலர் வகுப்பு (Kinder ), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 2

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 2

ஆண்டவர் உலகத்தைப் படைத்தார்

பாலர் வகுப்பிற்கான (1 -- 15) பாடங்களை பெற்றுக் கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

நம்மையும், நம்மைப் போன்ற மற்ற மனிதர்களையும் படைத்து இந்த உலகத்தில் வாழும்படி செய்தது ஆண்டவர். நாம் இந்த உலகத்தில் பார்க்கின்ற சூரியன், நிலா, மரங்கள், விதவிதமான பூக்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாவற்றையும் ஆண்டவர் தான் படைத்தார்.

John Paul Stanley / YoPlace.com.

இந்த உலகத்தைப் படைத்தபொழுது ஆண்டவர் ஆறு நாட்களுக்குள்ளாக  எல்லாவற்றையும் படைத்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார். ஆண்டவர் படைத்த முதல் மனிதனின் பெயர் தெரியுமா? அவன் பெயர் ஆதாம். முதல் மனுஷியின் (பெண்ணின்) பெயர் ஏவாள். 

John Paul Stanley / YoPlace.com.

அவர்கள் எங்கே வசித்தார்கள் தெரியுமா? அவர்கள் வசிப்பதற்காக ஆண்டவர் எதை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்? குடிசையையா? குகையையா? தோட்டத்தையா? (தெரியவில்லை என்றால் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்!).


John Paul Stanley / YoPlace.com.
ஆண்டவர் நமக்காகப் படைத்த எல்லாவித அற்புதமான படைப்புகளுக்காகவும் தினமும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர் நமக்காகப் படைத்த இயற்கையின் பொக்கிஷங்களைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

வேத பகுதி: ஆதியாகமம் 1, 2
மனப்பாட வசனம்: ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 1:1)

ஆசிரியர்களுக்கான குறிப்பு: 
4-5 வயதுள்ள குழந்தைகள், இந்த வயதில் தான் மொழியை சற்று கற்று கொள்ள ஆரம்பித்திருப்பதால், பாடத்தில் உள்ள கருத்துக்களை விளக்கும் வார்த்தைகளை (conceptual words) புரிந்து கொள்ளுவதில் சிரமம் இருக்கலாம். ஆகவே ஆசிரியர்கள், பாடங்களை துவங்குவதற்கு முன் அந்த வார்த்தைகளை விளக்கும் படங்களை வைத்தோ, செயல்முறைகளை வைத்தோ அந்த வார்த்தைகளை புரிய வைத்து விட்டு, பாடங்களை கற்றுக் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்முறை பயிற்சி:
இந்த பாடத்தில் வரும் படைப்பு / சிருஷ்டிப்பு ஆகிய வார்த்தைகளை புரிந்து கொள்ளுவதில் குழந்தைகளுக்கு சிரமம் இருக்கலாம். ஆகவே இந்த வார்த்தைகளை கற்றுக் கொடுப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியை வகுப்பில் செய்யலாம்.
           எ-டு: இது   சாராவின்      படைப்பு   
                      இது   ஜானின்          படைப்பு
இதை குழந்தைகளிடம் காட்டி, ஒவ்வொருவரும் அவரவர் முயற்சியினால் செய்யும் ஒன்றை படைப்பு அல்லது சிருஷ்டிப்பு என்று அழைக்கிறோம். இதைப் போலவே ஆண்டவரும் நம்மை தமது கரத்தினால் படைத்தார் என்று கற்றுக் கொடுக்கவும்.

             

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...