Saturday, April 18, 2020

ஆபிரகாம் தேவனால் சோதிக்கப்படுதல் (God Tests Abraham), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 2

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 2

ஆபிரகாம் தேவனால் சோதிக்கப்படுதல்

ஆபிரகாம் “விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கப்படுகிறார். அதின் காரணம் என்ன என்று தெரியுமா?

ஆபிரகாமுக்கும், சாராளுக்கும் அவர்களுடைய வயதான காலத்திலே ஈசாக்கு என்கிற ஒரு மகன் பிறந்தான். தம்முடைய வார்த்தைகளுக்கு ஆபிரகாம் கீழ்ப்படிவாரா என்று சோதிக்க தேவன் விரும்பினார். ஒருநாள் தேவன் ஆபிரகாமிடம், அவருடைய ஒரே மகன் ஈசாக்கைக் கூட்டிக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே உள்ள மலைகள் ஒன்றில் அவனை பலியிடும்படி கூறினார். ஆபிரகாம் சற்றும் தயங்காமல் தேவனுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிய முற்பட்டார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

அடுத்த நாள், விடியற்காலமே ஆபிரகாம் எழுந்து, தன்னுடைய கழுதையின் மேல் சேணம் கட்டி, பலிக்குத் தேவையான விறகுகளையும் எடுத்துக் கொண்டார். தன்னுடைய மகனான ஈசாக்கையும், தன்னுடைய வேலைக்காரர்களில் இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு மோரியா தேசத்துக்குப் புறப்பட்டார். 

Sweet Publishing / FreeBibleimages.org.
மூன்று நாள் பிரயாணம் செய்தபின், தேவன் சொன்ன இடத்தைத் தூரத்திலே பார்த்தார். அப்பொழுது அவர் தன்னுடைய வேலைக்காரரை அங்கேயே நிற்க வைத்துவிட்டு, விறகையும் கத்தியையும் எடுத்துக் கொண்டார். தன்னுடைய மகன் ஈசாக்கை மாத்திரம் கூட்டிக் கொண்டு, மலையின் மேல் ஏறிப் போனார்.

Sweet Publishing / FreeBibleimages.org. 

அவர்கள் மலையின் மேல் ஏறிப் போகும் பொழுது ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “பலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான். அப்பொழுது ஆபிரகாம் ஈசாக்கைப் பார்த்து, தம்முடைய பலிக்கான ஆட்டுக்குட்டியை தேவனே கொடுப்பார் என்று கூறினார். பின்னர் அவர்கள் தேவன் ஆபிரகாமுக்கு காட்டின இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஆபிரகாம் அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினார். 

Sweet Publishing / FreeBibleimages.org.
பின்னர் ஈசாக்கையே பலிப்பொருளாகக் கட்டி அந்த பலிபீடத்தில் கிடத்தினார். அவர் கத்தியை எடுத்து, ஈசாக்கை பலி செலுத்த முயலும் பொழுது, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. அது ஈசாக்கை பலி செலுத்த வேண்டாம் என்றும், தன்னுடைய ஒரே மகனையே தேவனுக்கென்று பலி செலுத்த ஆபிரகாம் ஒப்புக் கொண்டபடியால், அவர் உண்மையாகவே தேவனுக்குப் பயப்படுகின்ற மனிதன் என்றும் தேவன் கூறினார்.
Sweet Publishing / FreeBibleimages.org.

ஆபிரகாம் அங்கே ஒரு புதரிலே, கொம்புகள் சிக்கியிருந்த ஒரு ஆட்டுக் கடாவைப் பார்த்தார். அவர் அதை பிடித்துக் கொண்டு வந்து, தன்னுடைய மகனுக்குப் பதிலாக பலியிட்டார். ஆபிரகாம் அந்த இடத்துக்கு “யேகோவா யீரே” என்று பெயரிட்டார். அதற்கு “கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று அர்த்தம், அதாவது நமக்குத் தேவையானதைக் கர்த்தர் கொடுப்பார் என்பது தான் அதன் பொருள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்து, அவனுடைய வம்சத்தினர், வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல எண்ணற்றவர்களாய் இருப்பார்கள் என்று வாக்கு கொடுத்தார். அந்த வாக்கின்படியே இன்று மத்திய கிழக்கு நாடுகள் பல, ஆபிரகாமின் வம்சாவளியை சேர்ந்தவர்களாய் இருக்கிறார்கள். இப்படி ஆபிரகாம் தேவனை சற்றும் சந்தேகிக்காமல், முழுமையாக விசுவாசித்தபடியால் தான் அவரை “விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கின்றோம்.

வேத பகுதி: ஆதியாகமம் 22: 1-19

மனப்பாட வசனம்: நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. (உபாகமம் 6:5)


கேள்வி பதில்  

1.     விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படுவது யார்?

………………………………………

2.    ஈசாக்கை தேவன் எந்த தேசத்தில் உள்ள மலைக்கு அழைத்து கொண்டு போக சொன்னார்? .…………………………….

3.    பலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டது யார்?

………………………………….

4.    ஆபிரகாம் எதிலே கொம்புகள் சிக்கியிருந்த ஆட்டுக் கடாவைப் பார்த்தார்? …………………………………..

5.    ஆபிரகாம் ஆட்டுக்கடாவை பலியிட்ட இடத்திற்கு என்ன பெயரிட்டார்? ……………………………….

 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்

1.    ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த மகன்

அ) மோசே                 ஆ) ஈசாக்கு            இ) யோசேப்பு

 2. ஆபிரகாம் எதில் பிரயாணப்பட்டு போனார்?

      அ) ஒட்டகம்               ஆ) குதிரை             இ) கழுதை

 3. ஆபிரகாம் பலிபீடத்தைக் கட்டி யாரை கிடத்தினார்?

      அ) ஆடு                      ஆ) கழுதை             இ) ஈசாக்கு

4. ஆபிரகாம் கேட்ட சத்தம் எங்கிருந்து உண்டானது?      

      அ) புதர்                         ஆ) வானம்             இ) மலை

5. யெகோவா யீரே என்றால் ………………. பர்வதத்திலே

     பார்த்துக்கொள்ளப்படும்      

     அ) மோரியா              ஆ) ஓரேப்                 இ) கர்த்தருடைய




No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...