Saturday, March 19, 2022

சிம்சோன் – தேவனுக்கென்று நசரேயன் (Samson - A Nazirite unto God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 13

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 13

சிம்சோன் – தேவனுக்கென்று நசரேயன்

Click the following link to visit the English Sunday School Lessons Blog

இதற்கு முந்தைய பாடத்தில் இஸ்ரவேலருடைய தலைவராகிய யோசுவா அவர்களை கானானுக்கு அழைத்து சென்றதையும், அங்கே அவர்கள் யுத்தம் செய்து கானானிய  பட்டணங்களை கைப்பற்றினதையும் அறிந்தோம். அவர்கள் கைப்பற்றிய கானானிய பட்டணங்களை இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் பங்கிட்டு, வீடுகளைக் கட்டி, பயிர்களை நட்டு, ஆடுமாடுகளை வளர்த்து சுதந்திரமான ஜனங்களாக வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்களுக்குப் பின் இஸ்ரவேலின் தலைவராகிய யோசுவா, வயதாகி இறந்து போனார். அந்த நாட்களிலே இஸ்ரவேலரின் தலைவர்களை “நியாயாதிபதி” என்றே அழைத்தார்கள். மற்ற நாடுகளை ராஜாக்கள் ஆட்சி செய்தது போல இஸ்ரவேல் தேசத்தை “நியாதிபதிகள்” ஆளுகை செய்தார்கள். அவர்கள் பலவித பொறுப்புகளை நிர்வாகிக்க வேண்டியிருந்தது.  யுத்தம் வந்தால் இஸ்ரவேல் தேசத்தை தலைமையேற்று நடத்திச் செல்லுவது மட்டுமல்லாமல், ஜனங்களுடைய வழக்குகளை விசாரித்து நியாயம் வழங்குவதும் நியாதிபதிகளுடைய வேலையே ஆகும். அவர்கள் தீர்க்கதரிசிகளாகவும் செயல்பட்டார்கள்.

இஸ்ரவேலரின் தலைவராகிய யோசுவா இறந்துபோன பின் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை மறந்து பாவம் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் அருகே குடியிருந்த பிற தேசங்கள் இவர்களுடன் சண்டையிட்டு, தேசத்தை கொள்ளையிட்டார்கள். எப்பொழுதெல்லாம் இவ்வாறு நடக்கிறதோ அப்பொழுதெல்லாம், இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரிடம் மன்றாடுவார்கள், ஆண்டவர் அவர்கள் மேல் இரக்கமுற்று அவர்களை காப்பாற்றுவதற்காக நியாயாதிபதிகளை எழுப்பப்பண்ணுவார். இவ்வாறே ஒருமுறை பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரை நாற்பது வருடங்கள் கொடுமையாய் ஒடுக்கினார்கள்.

கானான் தேசத்தின் சோரா என்ற ஊரிலே மனோவா என்ற மனிதனும் அவனுடைய மனைவியும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. ஒருநாள் ஆண்டவருடைய தூதன் மனோவாவின் மனைவிக்கு தரிசனமாகி (காட்சி கொடுத்து) அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார். அந்த மகன் அவன் வாழும் நாட்களெல்லாம் தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான்.  (நசரேயன் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள எண்ணாகமம் 6:1-21ஐ வாசிக்கவும்). 

அதனால் மனோவாவின் மனைவியும், பிறக்கப் போகிற குழந்தையும் தீட்டான எந்த ஒரு உணவையும், திராட்சைச் செடியிலிருந்து தயாரிக்கப்படுகின்ற எந்த ஒரு பொருளையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது என்றும் தேவதூதன் கூறினார். (இஸ்ரவேல் ஜனங்களுக்கு தீட்டு என்று விலக்கப்பட்ட உணவுகளை பற்றி அறிந்து கொள்ள லேவியராகமம் 11ஐ வாசிக்கவும்). குழந்தை நசரேயனாய் வாழ்ப்போவதால், அவனுடைய தலைமுடி வெட்டப்படவும் கூடாது. அவன் இஸ்ரவேலின் நியாதிபதியாய் இருப்பான் என்றும் அறிவித்தார்.

திராட்சை செடி

மனோவாவின் மனைவி, தேவதூதன் தனக்கு தரிசனமானதையும், அவர் தன்னுடன் கூறின எல்லாவற்றையும் மனோவாவிற்கு அறிவித்தாள். மனோவா தேவனிடம், அந்த தேவதூதனை இன்னொருமுறை அனுப்பி, தங்களுடைய மகனை வளர்க்கும் முறையை கற்பிக்குமாறு விண்ணப்பம் செய்தார்.

மனோவாவின் மனைவி வயல்வெளியில் இருக்கும்பொழுது தேவனுடைய தூதன் இன்னொருமுறை தரிசனமானார். அவள் வேகமாய்ப் போய் மனோவாவை அழைத்து வந்தாள். தேவதூதன் தான் முன்கூறின எல்லாவற்றையும் அவர்கள் கடைபிடிக்கும்படி அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். மனோவா அவருக்கு வெள்ளாட்டுக்குட்டியை சமைத்து விருந்தளிக்க விரும்பினார். ஆனால் தேவதூதனோ தான் உணவு உண்ணுவதில்லை என்றும் வேண்டுமானால் தேவனுக்கு தகனபலியிடுமாறும் அறிவுறுத்தினார். மனோவா தேவதூதனிடம், நீர் எங்களுக்கு சொன்னவைகள் எல்லாம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மை கனப்படுத்தும்படி, உம்முடைய பெயர் என்ன என்று கேட்டார். அப்பொழுது தேவதூதன், “அதிசயம்” என்று கூறினார்.

தேவதூதன் கூறினபடியே, அங்கு ஒரு அதிசயம் நடந்தது. மனோவா தேவனுக்கு தகனபலி செலுத்தும்படி, ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் போஜனபலியையும் கொண்டு வந்து அதை ஒரு கன்மலையின்மேல் பலியாகப் படைத்தார். அப்பொழுது பலியிலிருந்து எழும்பின அந்த நெருப்பின் நடுவிலிருந்து தேவதூதன் வானத்திற்கு மேலே ஏறிப்போனார். அதைப்பார்த்த பொழுது மனோவாவும் அவன் மனைவியும் முகங்குப்புற விழுந்தார்கள். 

மனோவா மிகவும் பயந்து தன்னுடைய மனைவியிடம், தாங்கள் தேவனை தரிசித்ததினால் தங்களுக்கு சாவு நேரிடும் என்று கூறினான். ஆனால் அவன் மனைவியோ, ஆண்டவர் அவர்களை கொல்லுவதற்கு எண்ணியிருந்தாரானால், அவர்களுடைய தகனபலியை ஏற்றிருக்க மாட்டார், பின்நாட்களில் நடக்கப்போவதை அறிவித்திருக்கவும் மாட்டார் என்று கூறினாள். அவர்கள் நம்பினபடியே அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு சிம்சோன் என்று பெயரிட்டார்கள். அவன் ஒரு நசரேயனாக இருந்து, தன்னுடைய முடியை வெட்டாமல் நீளமாக வளர்த்தியிருந்தான். சிம்சோன் இயற்கைக்கு அப்பாற்பட்ட பலம் வாய்ந்தவனாயிருந்தான். அவன் இஸ்ரவேலின் நியாதிபதியாயிருந்து இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவர்களை பெலிஸ்தரிடமிருந்து காப்பாற்றினான்.

வேதபகுதி: நியாதிபதிகள் 13

மனப்பாட வசனம்: சங்கீதம் 84:5

For Sunday School activities and stories in English

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில் 

1.    இஸ்ரவேலரை நடத்தின தலைவர்களுக்கு அக்காலத்திலே கொடுக்கப்பட்ட பெயர் என்ன?   ………………………………………

2.    மனோவாவின் மனைவிக்கு தரிசனமானது யார்?  

………………………………………

3.    நசரேயன் எதை சாப்பிடக் கூடாது? ………………………………………..

4.    மனோவா பலியாகப் படைத்தது என்ன? …………………………………

5.    மனோவா பலியிட்ட போது என்ன அதிசயம் நடந்தது? ……………………………………… 

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:

1.    பெலிஸ்தியர்கள் எத்தனை வருடங்கள் இஸ்ரவேலரை கொடுமையாய் ஒடுக்கினார்கள் (40 / 14)

2.    மனோவாவின் மனைவி சாப்பிடக்கூடாதது (ஒலிவப்பழம் / திராட்சைப்பழம்)

3.    மனோவா தேவதூதனுக்கு எதை சமைத்து விருந்தளிக்க விரும்பினார் (கொழுத்த கன்றை / வெள்ளாட்டுக்குட்டியை)

4.    தேவதூதன் எதிலிருந்து வானத்திற்கு மேலே ஏறிப்போனார் (நெருப்பு / சுழல்காற்று)

5.    சிம்சோன் இயற்கைக்கு அப்பாற்பட்ட எதைக் கொண்டிருந்தான் (ஞானம் / பலம்)





Thursday, March 17, 2022

யெருபாகால் (Jerub-Baal), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 13

  ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )

வயது: 6 - 7 வயது 
வகுப்பு: I & II 
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 13

யெருபாகால் 

                இதற்கு முந்தின பாடத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்திற்கு சென்றதையும், அவர்கள் அதை தங்கள் சொந்த நாடாக்குவதற்காக எவ்வாறு பல பட்டணங்களை கைப்பற்ற வேண்டியிருந்தது என்றும் பார்த்தோம். சிறிது வருடங்கள் கழித்து, அவர்களை கானானுக்குள் அழைத்து சென்ற அவர்கள் தலைவனாகிய யோசுவா வயதாகி இறந்துவிட்டார். அந்த நாட்களிலே இஸ்ரவேலின் தலைவர்களை “நியாயாதிபதி” என்று அழைத்தார்கள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

               யோசுவா இறந்த பின் இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை மறந்து, பல பாவ செயல்களிலே ஈடுபட ஆரம்பித்தார்கள். அதனால் அருகிலிருந்த மற்ற தேசங்கள் அவர்களை துன்புறுத்த ஆரம்பித்தனர். ஒருமுறை அவர்கள் அருகிலிருந்த “மீதியானியர்” என்கிற கூட்டத்தினர் இஸ்ரவேல் ஜனங்களை ஏழு வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினார்கள். திடீரென்று பெருங்கூட்டமாக படையெடுத்து வரும் அவர்கள், இஸ்ரவேல் தேசத்தில் அறுவடை செய்து வைத்திருக்கும் கதிர்களையெல்லாம் கொள்ளையடித்து சென்று விடுவார்கள். இதனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகுந்த பயம் உண்டானது. ஏனென்றால் உணவு தானியங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டால், மக்கள் பசி பட்டினியில் இறந்து போக நேரிடும். ஏழு வருடங்களுக்குப் பின் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் குற்றங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு தங்களுக்கு உதவி செய்யும்படி வேண்டினார்கள். ஆண்டவர் அவர்கள் மேல் இரக்கமுற்று அவர்களை மீதியானியரிடத்தில் இருந்து விடுவிக்கும்படி அவர்களுக்காக ஒரு நியாயாதிபதியை எழுப்பினார். 

Sweet Publishing / FreeBibleimages.org.

               அதற்காக கர்த்தர் தெரிந்து கொண்ட மனிதர் யோவாஸ் என்பவரின் மகனான கிதியோன். கோதுமை அறுப்பின் நாட்கள் வந்தபொழுது, கிதியோன் கோதுமையை போரடிப்பதற்காக சென்றான். போரடிப்பது என்றால் கோதுமை மணிகளை, தாளிலிருந்து பிரித்தெடுப்பது. பின்னர் இந்த கோதுமை மணிகளை அப்பங்களாக (ரொட்டிகளாக) சுடுவதற்கு பயன்படுத்துவார்கள். கிதியோன் இவ்வாறாக போரடித்துக் கொண்டிருந்தபொழுது, கர்த்தருடைய தூதன் அங்கு வந்து ஒரு கர்வாலி மரத்தின் கீழ் உட்கார்ந்தார். கர்த்தருடைய தூதன் கிதியோனிடம், மீதியானியருக்கு எதிராக புறப்பட்டுப் போய், யுத்தம் செய்து, ஜெயித்து, இஸ்ரவேல் ஜனங்களை மீட்குமாறு கூறினார். 

Sweet Publishing / FreeBibleimages.org.

               கிதியோனுக்கோ தன்னால் மீதியானியரை ஜெயிக்க முடியும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனென்றால் இஸ்ரவேலின் சிறிய கோத்திரங்களில் ஒன்றாகிய மனாசே கோத்திரத்தில், மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவன் தான் இந்த கிதியோன். அவனுடைய குடும்பத்திலும் இவன் தான் மிகவும் சிறியவன். அவனுடைய குடும்பத்தினர் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை வழிபடவில்லை. அவர்கள் பாகால் என்கிற தெய்வத்தை வழிபட்டு அதற்கு ஒரு பலிபீடமும் கட்டியிருந்தனர். ஆண்டவர் கிதியோனிடம், மீதியானியரை தோற்கடிப்பதற்கு தான் அவனுக்கு உதவுவதாக வாக்களித்தார். 

Sweet Publishing / FreeBibleimages.org.

              அதே இரவிலே, ஆண்டவர் கிதியோனிடம், கிதியோனின் தகப்பனாகிய யோவாஸ் கட்டி இருந்த பாகாலின் பலிபீடத்தை இடித்து, அதின் அருகே தோப்பை வெட்டி விடுமாறு கூறினார். ஆண்டவர் கூறினபடியே, கிதியோன் தன்னுடைய பத்து வேலைக்காரரைக் கூட்டி கொண்டு போய், பாகாலின் பலிபீடத்தை இடித்து தோப்பையும் வெட்டி போட்டான். ஜனங்களுக்குப் பயந்ததினால் கிதியோன் அதை இராத்திரியிலே செய்தான். அந்த ஊர் மக்கள் காலையிலே எழுந்தபோது, பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டு, தோப்பு வெட்டப்பட்டு கிடப்பதையும் பார்த்து, அதை யார் செய்தது என்று விசாரித்தனர். அது கிதியோன் செய்தது என்று தெரிய வந்தது. அதனால் அவர்கள் கிதியோனை கொல்லும்படியாக தேடினார்கள். 

Sweet Publishing / FreeBibleimages.org.

               ஊர் மக்கள், கிதியோனின் தகப்பனாகிய யோவாசிடம், கிதியோன் செய்ததெல்லாவற்றையும் கூறி, அவனைக் கொல்லும்படியாக அவனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கிதியோனின் தகப்பனோ, பாகாலின் பலிபீடத்தை கிதியோன் இடித்தால், பாகாலே அதற்காக வழக்காடட்டும் (பழிதீர்த்துக் கொள்ளட்டும்) என்று கூறினார். இதைக் கேட்டவுடன் ஜனங்கள் அவனை விட்டுவிட்டு சென்றார்கள். அதனால் கிதியோனுக்கு “யெருபாகால்” என்கிற இன்னொரு பெயரும் உண்டு. எதிர்பார்த்தபடியே, பாகால் கிதியோனை பழிதீர்க்கவும் இல்லை, கிதியோனுக்கு எதுவும் நடக்கவும் இல்லை. அவன் இஸ்ரவேலின் நியாயாதிபதியாய் மீதியானியருக்கு எதிரே யுத்தம் செய்து அவர்களை ஜெயித்து, இஸ்ரவேல் மக்களை விடுவித்தான். 

Sweet Publishing / FreeBibleimages.org.

வேதபகுதி: நியாயாதிபதிகள் 6:1-32

மனப்பாட வசனம்: சங்கீதம் 34:22 

  

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1.    இஸ்ரவேலரை கொடுமையாக ஒடுக்கினது யார்?  ……………………………………..

2.    இஸ்ரவேலரை விடுவிப்பதற்காக தெரிந்துகொள்ளப்பட்ட மனிதன் யார்? ……………………………………..

3.    இஸ்ரவேலர் எதினால் மிகவும் பயந்தார்கள்?

……………………………….

4.    கர்வாலி மரத்தின் கீழ் வந்து அமர்ந்தது யார்? ……………………………..

5.    கிதியோனுக்கு கொடுக்கப்பட்ட புது பெயர் என்ன?

…………………………………………… 

பொருத்துக: 

1.     யோசுவா                       - பாகாலுக்கு பலிபீடம் கட்டினான்

2.    கர்த்தருடைய தூதன்  - கோதுமை போரடித்தான்

3.    கிதியோன்                     - பாகால் வழக்காடட்டும்

4.    யோவாஸ்                       - கர்வாலி மரத்தின் கீழ் அமர்ந்தார்

5.    யெருபாகால்                 - கானானுக்குள் வழிநடத்தினார்




Monday, March 7, 2022

பிலேயாமின் கழுதை (Donkey Speaks to Balaam), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 13

 KINDER (பாலர் வகுப்பு) 

வயது – 4 & 5     

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. 
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.   

பாடம் – 13

பிலேயாமின் கழுதை 

                    பிலேயாம் என்பவன் மீதியான் தேசத்தில் வசித்து வந்த ஒரு தீர்க்கதரிசி. தீர்க்கதரிசி என்பவர் ஆண்டவர் கூறுகிற வார்த்தைகளைக் கேட்டு அதை மக்களிடம் கூற வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானான் என்கிற தேசத்தை நோக்கி ஒரு நீண்ட பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வழியில் மோவாப் என்கிற ஒரு தேசத்தை அடைந்தார்கள். பாலாக் என்கிற மோவாப் தேசத்தின் ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் தன் தேசத்தின் அருகில் இருப்பதைப் பார்த்து பயமடைந்தான்.

                   இஸ்ரவேல் ஜனங்களை ஏதாவது தந்திரம் செய்து தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தான். பிலேயாம் தீர்க்கதரிசியை வரவழைத்து அவனை வைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக சாபங்களை கூறினால், இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தத்தில் தேல்வியடைந்து விடுவார்கள் என்று அவன் நினைத்தான். அதினால் அதிக பணம் கொடுப்பதாக ஆசை காட்டி, பிலேயாமை அழைத்துக் கொண்டு வந்தான். ஆனால் தேவனுக்கு அது பிடிக்கவில்லை. ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது என்று அவர் சொல்லியிருந்தார்.

                 அதனால் கர்த்தருடைய தூதன் ஒருவன் போகிற வழியில் பிலேயாமிற்கு எதிர்ப்பட்டார். பிலேயாமின் கழுதை தேவனுடைய தூதனைப் பார்த்தவுடன் வழியை விட்டு விலகிப் போனது. 

அப்பொழுது பிலேயாமிற்கு கோபம் வந்து அவன் கழுதையை அடித்தான். உடனே அதிசயமான ஒரு காரியம் நடந்தது. கழுதை தன் வாயத் திறந்து பேச ஆரம்பித்தது. நீ எதற்காக என்னை இந்த மூன்று தடவை அடித்தாய் என்று கேட்டது.

                   அப்பொழுது தான் பிலேயாமின் கண்கள் திறக்கப்பட்டு, கையில் வாளோடு நிற்கிற ஒரு தேவதூதனை அவன் பார்த்தான். உடனே பிலேயாம் தான் திரும்பி சென்று விடுவதாக கூறினான். தேவதூதன் பிலேயாமைப் பார்த்து, பாலாக்கின் ஆட்களோடு செல்லும்படியாகவும், ஆனால் சொல்லுப்படி தான் கட்டளையிடும் வார்த்தைகளை மட்டுமே கூற வேண்டும் என்றும் கூறினார். அதன்படியே பிலேயாம் சென்றான்.

Jack Foster / MrBibleHead.blogspot.com 

வேத பகுதி: எண்ணாகமம் 22:1-34

மனப்பாட வசனம்: கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன். (சங்கீதம் 86:11a)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...