Monday, February 10, 2020

சிருஷ்டிப்பின் ஏழு நாட்கள் (The Seven Days of Creation), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 1

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 1

சிருஷ்டிப்பின் ஏழு நாட்கள்

இன்று நாம், பூமியில் காணப்படுகின்ற, பலவிதமான இயற்கை காட்சிகளின் அழகையும், விதவிதமான பூக்கள், பறவைகள், மிருகங்களையும் கண்டு ரசிக்கின்றோம். இவை எல்லாவற்றையும் ஆண்டவர் படைப்பதற்கு முன்பாக, பூமி வெறுமையாகவும், ஒழுங்கற்றும் காணப்பட்டது. பூமி தண்ணீரால் நிறைந்திருந்தது. தேவன் பூமியையும், அதில் உள்ள எல்லாவற்றையும் எப்படி படைத்தார் என்று தெரியுமா? நாம் எதையாவது ஒன்றை செய்ய வேண்டும் என்றால் ஏற்கெனவே இருக்கின்ற ஏதாவது ஒரு பொருளை வைத்து தானே செய்ய முடியும்?

 

ஆனால் ஆண்டவர் நாம் காண்கின்ற இந்த முழு உலகத்தையும் நாம் காண்கின்ற எந்த ஒரு பொருளைக் கொண்டும் உருவாக்கவில்லை. அவர் எல்லாவற்றையும் தம்முடைய வார்த்தையினால் உண்டாக்கினார். அதன் அர்த்தம் என்னவென்றால் அவர் வாயிலிருந்து கட்டளை பிறந்தவுடன் இயற்கையின் பாகங்கள் ஒவ்வொன்றாக உருவானது. அதை தான் நாம் இந்த பாடத்தின் மூலமாக கற்றுக் கொள்ளப் போகிறோம்.  

www.fishnetbiblestories.com
சிருஷ்டிப்பின் முதல் நாள்: முதலாம் நாள் தேவன் “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று சொன்னார்அப்படியே வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்தையும், இருளையும் பிரித்து, வெளிச்சத்தைப் "பகல்" என்று அழைத்தார், இருளை "இரவு" என்று அழைத்தார். இரவும், பகலும் இவ்வாறு தான் உண்டாக்கப்பட்டது. 

Sweet Publishing / FreeBibleimages.org.

சிருஷ்டிப்பின் இரண்டாம் நாள்: இரண்டாம் நாள் தேவன், தண்ணீரின் நடுவில் ஆகாய விரிவு உண்டாகக்கடவது என்றார். கொஞ்சம் தண்ணீர் கீழாகவும், கொஞ்சம் தண்ணீர் மேலாகவும் பிரிந்து, நடுவே பரந்து விரிந்த ஆகாயம் காணப்பட்டது. தேவன் அதை ‘வானம்’ என்று அழைத்தார்.

John Paul Stanley / YoPlace.com.

சிருஷ்டிப்பின் மூன்றாம் நாள்: மூன்றாம் நாள் தேவன், வானத்திற்கு கீழே இருக்கிற தண்ணீர் எல்லாம் ஓரிடத்தில் சேரக்கடவது என்றார். இப்படி தண்ணீர் சேர்ந்து காணப்பட்ட இடத்தை ‘சமுத்திரம்’ என்றும், காய்ந்து தரையாகக் காணப்பட்ட இடத்தை ‘பூமி’ என்றும் தேவன் அழைத்தார். பின்பு தேவன் பூமியை, எண்ணற்ற விதங்களிலான புற்கள், பூண்டுகள் மற்றும் மரங்களால் நிறைத்தார்.

John Paul Stanley / YoPlace.com.
சிருஷ்டிப்பின் நான்காம் நாள்: நான்காம் நாள் தேவன், சூரியனையும் மற்ற நட்சத்திரங்களையும் படைத்தார்.

Sweet Publishing / FreeBibleimages.org.
சிருஷ்டிப்பின் ஐந்தாம் நாள்: ஐந்தாம் நாள் தேவன், கடல், சமுத்திரம் மற்றும் எல்லா நீர் நிலைகளிலும் காணப்படுகின்ற அனைத்து உயிரினங்களையும் படைத்தார். அதுமட்டுமல்லாமல், வானத்தில் பறக்கும் பறவைகளையும் படைத்தார்.

John Paul Stanley / YoPlace.com.

சிருஷ்டிப்பின் ஆறாம் நாள்: ஆறாம் நாள் தேவன், பூமியில் காணப்படுகின்ற சிறிதும், பெரிதுமான எல்லா மிருகங்களையும் படைத்தார். பின்னர் மனிதனை தன்னுடைய சாயலில் சிருஷ்டித்தார். அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தன்னைப் போலவே பார்க்கக்கூடிய ஒரு மனிதனையும் படைத்தார்.

John Paul Stanley / YoPlace.com.

சிருஷ்டிப்பின் ஏழாம் நாள்: தேவன் தாம் விரும்பின எல்லாவற்றையும் படைத்தபின் ஏழாம் நாளிலே ஓய்வெடுத்தார்.
இப்படி தான் தேவன், நாம் காண்கின்ற எல்லாவற்றையும் படைத்தார். 

www.fishnetbiblestories.com

வேத பகுதி: ஆதியாகமம்: 1,2

மனப்பாட வசனம்: விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய்காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். (எபிரெயர் 11:3)

For Sunday School activities and stories in English

Click this link to get this lesson in English language

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்: 

1.   வானத்தையும் பூமியையும் படைத்தது யார்? ......................

2.   தேவன் மூன்றாம் நாளில் சிருஷ்டித்தது என்ன? ......................

3.   தேவன் மீன்களை எந்த நாளில் சிருஷ்டித்தார்? .......................

4.   தேவன் மனிதனை யாருடைய சாயலில் சிருஷ்டித்தார்?    .......................

5.   தேவன் ஏழாம் நாளில் என்ன செய்தார்?    .......................

 பொருத்துக:

1. நாள் 1                                         தேவன் ஓய்ந்திருந்தார்

2. நாள் 2                                         மிருகங்கள், முதல் மனிதன்

3. நாள் 3                                         மீன்கள், பறவைகள்

4. நாள் 4                                         பகல், இரவு

5. நாள் 5                                         வானம், பூமி

6. நாள் 6                                         மரம், செடிகள்

7. நாள் 7                                         சூரியன், சந்திரன்


No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...