Tuesday, February 11, 2020

உலகின் முதல் மனிதர்கள் (God Created Adam and Eve), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 1

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 1

உலகின் முதல் மனிதர்கள்

 

தேவன் முதல் ஐந்து நாட்களில், நாம் இந்த உலகத்தில் காண்கின்ற எல்லாவிதமான அற்புதமான படைப்புகளையும் படைத்தார். நாம் காண்கின்ற நீல நிற வானம், கடல், அழகிய மரஞ்செடி, கொடிகள், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களையும், பின்னர் மீன்கள், பறவைகளையும் படைத்தார்.

John Paul Stanley / YoPlace.com.

ஆறாம் நாளில் தேவன், இந்த பூமியானது எல்லாவிதமான மிருக ஜீவன்களையும் பிறப்பிக்கக்கடவது என்றார். பூமி அப்படியே மிக சிறிய புழு பூச்சிகள் முதற் கொண்டு மிகப் பெரிய மிருகங்கள் வரை அனைத்தையும் பிறப்பித்தது. பின்னர் தேவன், ‘உலகில் உள்ள அனைத்தையும் ஆண்டு கொள்ளும்படியாக நம்மைப் போலவே ஒரு மனிதனைப் படைப்போம்’ என்று சொல்லி ஒரு மனிதனைப் படைத்தார். அதனால் தான் மனிதன் “தேவ சாயலில்” படைக்கப்பட்டிருகிறான் என்று சொல்லுகிறோம்.

John Paul Stanley / YoPlace.com.

தேவன் பூமியிலிருந்து கொஞ்சம் புழுதியை எடுத்து அதை மனிதனாக வடிவமைத்தார். பின்னர் அவனுக்கு உயிர் கொடுக்கும்படியாக தன்னுடைய சுவாசத்தை அவனுடைய மூக்கில் ஊதினார். உடனே மனிதன் உயிர்பெற்றான். அவன் பெயர் ‘ஆதாம்’. பின்னர் தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து விட்டு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அதனால் அந்த நாளை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்தினார்.

தேவன் ஆதாமை எங்கே வாழவைத்தார் தெரியுமா? தேவன், ஏதேன் என்கிற அழகிய ஒரு தோட்டத்தையும் உண்டாக்கி தாம் படைத்த மனிதனை அதிலே வைத்தார். அந்த தோட்டத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளும் வேலையையும் அவனுக்குக் கொடுத்தார். தேவன் தாம் படைத்த அனைத்து மிருக ஜீவன்களையும் ஆதாமிடம் கொண்டுவந்து அவைகளுக்கு பெயர் கொடுக்கும்படியாகவும் கூறினார். ஆதாம், அனைத்து பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் தான் விரும்பின பெயர்களைக் கொடுத்தான்.

John Paul Stanley / YoPlace.com.

தேவன் ஆதாமுக்கு உதவும்படியாக இன்னொரு நபரையும் படைக்க விரும்பினார். அதனால் ஆதாமுக்கு நல்ல தூக்கத்தை வரப்பண்ணி, அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை ஒரு பெண்ணாக உருவாக்கி ஆதாமிடம் கொண்டு வந்தார். அதாம், அவள் இனி பிறக்கப்போகிற அனைத்து மனிதர்களுக்கும் தாயாக இருப்பாள் என்று சொல்லி அவளுக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான். இதுதான் இந்த உலகில் முதன்முதலாக படைக்கப்பட்ட மனிதர்களான ஆதாம் மற்றும் ஏவாளின் வரலாறு!

வேத பகுதி: ஆதியாகமம் 1, 2 

மனப்பாட வசனம்: இப்பொழுதும் கர்த்தாவேநீர் எங்களுடைய பிதாநாங்கள் களிமண்நீர் எங்களை உருவாக்குகிறவர்நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. (ஏசாயா 64:8).


பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்: 

1.      தேவன் மிருகங்களைப் படைத்த நாள் எது?

………………………………………

2.     தேவன் மனிதனை யாருடைய சாயலில் படைத்தார்?

……………………………………….

3.     தேவன் மனிதனை எதிலிருந்து வடிவமைத்தார்?

……………………………………….

4.    தேவன் ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்திய நாள் எது?

……………………………………….

5.     தேவன் மனிதனிலிருந்து எதை எடுத்து அதைப் பெண்ணாக உருவாக்கினார்? …………………………………………….

 சரியா தவறா 

1.       தேவன் ஆறாவது நாளில் மனிதனைப் படைத்தார்

          ( சரி / தவறு )

2.                 தேவன் மனிதனை எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளும்படியாகப் படைத்தார் ( சரி / தவறு )

3.                 தேவன் ஆதாமுடைய மூக்கில் ஊதி அவனை உயிரடையும்படி செய்தார் ( சரி / தவறு )

4.                இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஆதாம் பெயரிட்டான். ( சரி / தவறு )

5.                 தேவன் உருவாக்கின பெண்ணிற்கு ஆதாம் “சாராள்” என்று 
           பெயரிட்டான். ( சரி / தவறு )        


No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...