Wednesday, March 31, 2021

பழமரங்களைப் பாதுகாத்தல் (Protecting the Fruit Trees), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 11

 KINDER (பாலர் வகுப்பு) 

வயது – 4 & 5     

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. 
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose. 
 Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English https://jacobsladdersundayschool.blogspot.com/
For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/ 

பாடம் – 11

பழமரங்களைப் பாதுகாத்தல்



பாலர் வகுப்பிற்கான (1 -- 15) பாடங்களை பெற்றுக் கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

 

                      உங்களுக்குத் தெரிந்த சில பழமரங்களின் பெயர்களைக் கூறமுடியுமா? தேவன் பலவிதமான மரங்களைப் படைத்து, நாம் பயன்படுத்துவதற்காக நமக்குத் தந்திருக்கிறார். நாம் நிழலுக்காகவும், நமது சுற்றுப்புறத்தை அழகுபடுத்துவதற்காகவும் மரங்களை நடுகிறோம். மரங்களால் நமக்கு பல உபயோகங்கள் உண்டு.

John Paul Stanley / YoPlace.com.

                       மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கும் மிருகங்களையும், மரத்தின் கிளையில் வைக்கப்பட்டிருக்கும் பறவைக்கூடுகளையும் பார்த்திருக்கிறீர்களா? மரங்கள் பலவிதமான பழங்களைக் கொடுக்கின்றன. மரங்களின் பல பகுதிகள் உணவாகவும், வேறு சில பகுதிகள் மருந்தாகவும் பயன்படுகின்றன. பழமரங்களை தேவன் நம்முடைய பயன்பாட்டிற்காகவும், மிருகங்களுடைய உணவிற்காகவும் கொடுத்திருக்கிறார்.

John Paul Stanley / YoPlace.com.

                     தேவன் தம்முடைய சிருஷ்டிப்பை தேவையில்லாமல் அழிப்பதை விரும்பவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து, கானான் என்கிற தேசத்திற்கு போய் கொண்டிருந்தபொழுது ஆண்டவர் அவர்களுக்கு பல கட்டளைகளைக் கொடுத்தார். அதில் ஒன்று என்னவென்றால் அவர்களுடைய உணவிற்காக பயன்படக்கூடிய பழமரங்களை அழிக்கக்கூடாது என்பதே ஆகும்.

                     இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தத்திற்குப் போகும்பொழுது அங்கே பழமரங்களைக் கண்டால், தங்களுக்கு தங்குவதற்கு இடம் உண்டாக்குவதற்காக, பழமரங்களை கோடரியைக் கொண்டு வெட்டக்கூடாது. பழங்களைக் கொடுக்காத வேறுமரங்கள் இருந்தால் அவைகளை வெட்டி பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் பிற்காலத்தில் அவர்கள் உண்ணுவதற்கான பழங்களை பழமரங்கள் கொடுக்கும். 
Sweet Publishing / FreeBibleimages.org.
இவ்வாறு மரங்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஆண்டவர் இஸ்ரவேலருக்கு கற்றுக் கொடுத்தார். இதிலிருந்து தேவனுடைய சிருஷ்டிப்பை எவ்வாறு பொறுப்போடு பாதுகாக்க வேண்டும் என்பதை நாமும் கற்றுக் கொள்ளுகிறோம்.
வேத பகுதி: உபாகமம் 20:19, 20

மனப்பாட வசனம்: கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும். (சங்கீதம் 104:16) 

For Sunday School activities and stories in

English https://jacobsladderactivity.blogspot.com/              

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...