Saturday, September 12, 2020

யோசேப்பின் தானியக் களஞ்சியம் (Joseph Stores Food Grains), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 6

 ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )

வயது: 6 - 7 வயது 
வகுப்பு: I & II 
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 6

           யோசேப்பின் தானியக் களஞ்சியம்

                     சிறுவன் ஒருவனுக்கு அவனுடைய தகப்பனார் பல வருண அங்கி செய்து கொடுத்தார் அல்லவா! அந்த சிறுவனை ஞாபகம் இருக்கிறதா? ஆம். அது தான் யோசேப்பு! அவனுக்கு பதினோறு சகோதரர்கள் இருந்தார்கள். யோசேப்பு ஒரு கனவு கண்டான்.  அது அவனுடைய சகோதரர்கள் அவனை பணிந்து அவனுக்கு மரியாதை செலுத்துவதாக இருந்தது. அதனால் அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமை கொண்டார்கள். யோசேப்பினுடைய சகோதரர்கள் ஆடு மேய்ப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஆட்டிற்கான மேய்ச்சலைத் தேடி தொலைவான இடங்களுக்கு சென்று  பல நாட்கள் அங்கே தங்கி இருக்க வேண்டியது இருக்கும்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                     அப்படி யோசேப்பின் சகோதரர்கள் தொலைவான இடத்திற்கு போயிருந்த பொழுது யோசேப்பின் தகப்பனார், அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்று பார்த்து வரும்படி யோசேப்பை அனுப்பினார். யோசேப்பு பல இடங்களுக்கு அலைந்து திரிந்து அவர்களை தோத்தான் என்கிற இடத்திலே கண்டிபிடித்தான். ஆனால் யோசேப்பின் மேல் பொறாமை கொண்டிருந்த அவனுடைய சகோதரர்களோ, அவன் தூரத்தில் வரும்பொழுதே அவனுக்கு தீங்கு விளைவிக்க எண்ணினர்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                     யோசேப்பின் சகோதரர்கள் அவனை அவ்வழியே சென்று கொண்டிருந்த மீதியானிய வியாபாரிகளிடத்தில் விற்றுப் போட்டனர். (மீதியானியர் என்றால் மீதியான் தேசத்தை சார்ந்தவர்கள். பழங்கால வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்வதற்கு பொருட்களை ஒட்டகங்கள் அல்லது கழுதைகள் மேல் ஏற்றி வேறு ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்வது வழக்கம்). மீதியானிய வியாபாரிகள் யோசேப்பை எகிப்திற்கு அழைத்து சென்று போத்திபார் என்கிற மனிதனிடத்தில் விற்றனர். ஒருநாள் போத்திபாரின் மனைவி யோசேப்பு செய்யாத ஒரு தவறை அவன் செய்ததாக பழி சுமத்தினாள். அதனால் அவன் சிறைசாலையில் அடைக்கப்பட்டான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                     யோசேப்பு சிறைசாலையில் இருக்கும்பொழுது எகிப்து தேசத்தின் மன்னனான பார்வோன் ஒரு கனவு கண்டான். அதனுடைய அர்த்தத்தை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஆண்டவர் யோசேப்போடே இருந்தபடியால் அவனால் அந்த கனவின் அர்த்தத்தை பார்வோனுக்கு சொல்லிக் கொடுக்க முடிந்தது. பார்வோன் கண்ட கனவின் அர்த்தம் என்னவென்றால் எகிப்து தேசத்தில் ஏழு வருடங்கள் பயிர்கள் ஏதும் விளையாமல் கொடிய பஞ்ச காலம் வரப்போகிறது (பஞ்சம் என்றால் உண்ணுவதற்கு உணவு கிடைக்காமல் இருப்பது).அந்த பஞ்ச காலம் வருவதற்கு முன், ஏழு வருடங்கள் மிகவும் அதிகமான விளைச்சலைக் கொடுக்கும். இது தான் பார்வோன் கண்ட கனவின் அர்த்தம்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                    யோசேப்பு பார்வோனுடைய கனவின் அர்த்தத்தை சொல்லி அதை சமாளிப்பதற்கான வழிமுறையையும் அவரே சொல்லிக் கொடுத்தார். எகிப்து தேசத்தில் பெரிய தானியக் களஞ்சியங்களைக் கட்டி அதில் தானியங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார். யோசேப்பு எகிப்து தேசத்தை பெரும் அழிவிலிருந்து காப்பாற்றினதால் பார்வோன் அவனை எகிப்து தேசத்தில் இரண்டாவது இடத்தில் வைத்தார். அதாவது பார்வோனுக்கு அடுத்த முக்கியமான நபராக மாற்றினார். எகிப்து தேசத்தில் தானியங்களை களஞ்சியங்களில் சேர்த்து வைக்கும் பொறுப்பை யோசேப்பிடமே கொடுத்தார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                   யோசேப்பு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மிகவும் கவனத்துடன் செய்தார். எகிப்தின் பல பட்டணங்களில் களஞ்சியங்களைக் கட்டி அதில் அளவற்ற தானியங்களை சேர்த்து வைத்தார். 

Sweet Publishing / FreeBibleimages.org.

                  சீக்கிரமே தேவனால் பார்வோனுக்கு வெளிப்படுத்தப்பட்ட பஞ்சகாலம் எகிப்து தேசத்தில் வந்தது. ஆனால் எகிப்து தேசத்தில் தானியங்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்ததினால், பஞ்சகாலத்தில் எகிப்து தேசத்தின் மக்கள் அழிவிலிருந்து தப்புவிக்கப்பட்டார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

வேத பகுதி: ஆதியாகமம் 41

மனப்பாட வசனம்: ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். (1 பேதுரு 5:6)                    

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1.    யோசேப்புக்கு எத்தனை சகோதரர்கள் இருந்தார்கள்?

……………………………………..

 2.    யோசேப்பு தன்னுடைய சகோதர்களை எங்கு கண்டு பிடித்தான்? …………………………..

 3.    யோசேப்பை அவனுடைய சகோதரர்கள் யாரிடத்தில் விற்றுப் போட்டார்கள்? ………………………….

4.    யோசேப்பை எகிப்து தேசத்தில் வாங்கினது யார்?

………………………………

5.    பார்வோனுடைய கனவின் அர்த்தத்தை சொன்னது யார்?

……………………………….

 பொருத்துக:

 1.    யோசேப்பு                                           - களஞ்சியம்

 2.    யோசேப்பின் சகோதரர்கள்          -  வியாபாரிகள்

 3.    பார்வோன்                                          -  சிறைசாலை

 4.    மீதியானியர்                                       -  தோத்தான்

 5.    தானியங்கள்                                       -  மன்னன்


No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...