Sunday, August 16, 2020

சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசா (Esau Sells His Birthright), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 5

                           ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )

வயது: 6 - 7 வயது 
வகுப்பு: I & II 
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 5

சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசா

                   ஏசா, யாக்கோபு ஆகிய இருவரும் சகோதரர்கள். அவர்கள் ஈசாக்குக்கும், ரெபெக்காளுக்கும் பிறந்த இரட்டைப் பிள்ளைகள். அவர்கள் வளர்ந்தபொழுது ஏசா வனவிலங்குகளை வேட்டையாடுவதில் திறமைசாலியாய் இருந்தான். அவன் வனத்திற்கு சென்று விலங்குகளை வேட்டையாடுவதில் தன்னுடைய நேரத்தை செலவழித்தான். யாக்கோபோ தன்னுடைய கூடாரத்தில் தங்கி, அங்குள்ள வேலைகளை கவனிப்பதையே விரும்பினான். (பழைய காலங்களில் மக்கள் வசிப்பதற்கு கூடாரங்களையே பயன்படுத்தினர்). 

Sweet Publishing / FreeBibleimages.org.

                ஒரு நாள் யாக்கோபு சிவப்பான பயற்றங் கூழ் சமைத்து கொண்டிருந்தான். அப்பொழுது ஏசா வனத்திலிருந்து கூடாரத்திற்கு திரும்பிவந்தான். ஏசா மிகவும் களைத்துப் போய் பசியோடே வந்திருந்தான். அவனுக்கு வனத்தில் வேட்டையாட எந்த ஒரு மிருகமும் கிடைக்கவில்லை. வனத்தில் மிருகங்களை வேட்டையாடி உணவு சமைப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஏசா கூடாரத்திற்கு வந்தவுடன் தன்னுடைய தம்பியாகிய யாக்கோபு சிவப்பான கூழ் சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவனிடத்தில் தனக்கு சாப்பிடுவதற்கு கொஞ்சம் கூழ் கொடுக்கும்படியாக கூறினான். ஆனால் யாக்கோபோ அவ்வளவு எளிதாக தன்னுடைய உணவை பகிர்ந்து கொடுப்பதற்கு ஆயத்தமாயில்லை.

Sweet Publishing / FreeBibleimages.org.

                    யாக்கோபு ஏசாவிடம் சிவந்த கூழிற்கு பதிலாக அவனுடைய சேஷ்ட புத்திரபாகத்தை விற்கும்படியாக கூறினான். சேஷ்ட புத்திரபாகம் என்றால் ஒரு குடும்பத்தில் முதல் பிறந்த மகனிற்கு அவனுடைய தகப்பனுடைய செல்வங்களில் எல்லாம் இரட்டிப்பான பங்கு கிடைக்கும். அதன் பெயர் தான் சேஷ்ட புத்திரபாகம். ஏசா சற்றும் யோசிக்காமல் தன்னுடைய சேஷ்ட புத்திரபாகத்தை யாக்கோபுக்கு விற்றுப் போட்டான். யாக்கோபு அதை வாங்கிக் கொண்டு  ஏசாவிற்கு அப்பத்தையுய்ம், பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அப்பத்தையும், பயற்றங்கூழையும் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய சேஷ்ட புத்திரபாகத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் போய்விட்டான்.

Sweet Publishing / FreeBibleimages.org. 

                   சிறிது காலத்திற்கு பின் தன்னுடைய செல்வங்களை எல்லாம் யாக்கோபிற்கு கொடுக்க வேண்டிய நேரம் வந்தபொழுதுதான் அவனுக்கு தான் செய்த தவறு நினைவிற்கு வந்தது. அதன் பின் அவன் தன் சேஷ்ட புத்திரபாகத்தை திரும்ப பெறுவதற்கு கடினமாக முற்சித்தும், அவனால் அதை திரும்ப பெற முடியவில்லை. நாமும் இதைப் போல நம்முடைய ஆசீர்வாதங்களை அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

Sweet Publishing / FreeBibleimages.org. 

வேத பகுதி: ஆதியாகமம் 25: 24 – 34

மனப்பாட வசனம்: உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். (நீதிமொழிகள் 3:6) 

 

பாடப் பயிற்சிகள் 

கேள்வி பதில்:

1.    ஈசாக்கு, ரெபெக்காளுடைய இரட்டைப் பிள்ளைகளுடைய பெயர் என்ன? ……………………………… 

2.    யார் வனவிலங்குகளை வேட்டையாடுவதில் திறமைசாலியாய் இருந்தான்?................................................. 

3.    யாக்கோபு என்ன சமைத்துக் கொண்டிருந்தான்?

………………………………………. 

4.    யாக்கோபு ஏசாவிடம் தனக்கு எதை விற்கும்படியாகக் கூறினான்? ……………………………………….. 

5.    யாக்கோபு ஏசாவிற்கு சாப்பிடுவதற்கு எதைக் கொடுத்தான்? ………………………………………… 

காலியான இடத்தை நிரப்பவும்:

1.    ஏசா, யாக்கோபினுடைய தகப்பனாரின் பெயர் ………………………… 

2.    ………………………… தன்னுடைய கூடாரத்தில் தங்கியிருப்பதை விரும்பினான். 

3.    ………………………… மிகவும் களைத்துப் போய் பசியோடே வந்திருந்தான். 

4.    யாக்கோபு ……………………….. கூழ் சமைத்து கொண்டிருந்தான். 

5.    ஏசா தன்னுடைய ……………………………….. பாகத்தை யாக்கோபுக்கு விற்றுப் போட்டான்.


No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...