Saturday, August 8, 2020

போராடி மேற்கொண்ட யாக்கோபு (Jacob Wrestles With God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 3

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் –3

போராடி மேற்கொண்ட யாக்கோபு

ஏசா, யாக்கோபு ஆகியோர் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் பிறந்த இரட்டை பிள்ளைகள். ஈசாக்கினுடைய மூத்த மகனான ஏசாவிற்கு “சேஷ்ட புத்திரபாகம்” என்கிற ஒரு சிறப்பு உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. யாக்கோபு சேஷ்ட புத்திரபாகத்தை ஏசாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக, ஏசா ஒரு நாள் பசியாய் இருந்தபொழுது பயற்றங்கூழைக் கொடுத்து சேஷ்ட புத்திரபாகத்தை வாங்கிக்கொண்டான். பின்பு தன் தகப்பனை ஏமாற்றி, ஏசாவிற்கு வர வேண்டிய ஆசீர்வாதங்களையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். இதனால் கோபமடைந்த ஏசா தன் சகோதரனை கொல்ல முயன்றான். பயந்து போன யாக்கோபு, ஆரானில் இருந்த தன் மாமனாகிய லாபானிடத்திற்கு ஓடிப் போனான். 

Sweet Publishing / FreeBibleimages.org.

அங்கு யாக்கோபு ராகேல் என்கிற பெண்ணை திருமணம் செய்ய விரும்பினான். ஆனால் லாபான் யாக்கோபை ஏமாற்றி லேயாள் என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தான். மற்றவர்களை ஏமாற்றினவன் இப்பொழுது ஏமாற்றப்பட்டான். லாபானுடன் தங்கி இருக்கையில், ஆடுகளை மேய்த்து கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. லாபான் யாக்கோபை ஏமாற்றி அவனுடைய சம்பளத்தை பத்துமுறை மாற்றினான். ஆகவே அவன் தன்னுடைய தகப்பன் வீட்டிற்கே திரும்பி செல்ல தீர்மானித்து, தன் குடும்பத்தாருடன் பிரயாணத்தை ஆரம்பித்தான். 

Sweet Publishing / FreeBibleimages.org.

அப்பொழுது ஏசா அவனை பார்ப்பதற்கு வருவதாக கேள்விப்பட்டு, மிகவும் பயமடைந்தான். அன்று இரவு அவர்கள் “யாப்போக்கு” என்கிற ஆற்றின் கரையை அடைந்தார்கள். யாக்கோபு தன் குடும்பத்தை அந்த ஆற்றை கடக்கப் பண்ணி விட்டு, அவன் மாத்திரம் தனித்து இருந்தான். 

Sweet Publishing / FreeBibleimages.org.

அப்பொழுது அங்கே வந்த ஒரு மனிதன் யாக்கோபோடே போராடினார். ஆனால் அவரால் யாக்கோபை ஜெயிக்கமுடியவில்லை. அதனால் யாக்கோபுடைய தொடையைத் தொட்டார். யாக்கோபுக்கு தொடை சுளுக்கு ஏற்பட்டது. பொழுது விடியும் நேரம் வந்தபொழுது, அந்த மனிதன் யாக்கோபிடம் தன்னைப் போகவிடும்படி கூறினார். ஆனால் யாக்கோபோ அவர் தன்னை ஆசீர்வதித்தால் தான், அவரைப் போக விடப்போவதாக கூறினான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

அப்பொழுது அவர் அவனிடம் அவனுடைய பெயரைக் கேட்டார். அவன் யாக்கோபு என்றான். அந்த மனிதன், “இனி உன் பெயர் இஸ்ரவேல் எனப்படும், நீ தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டாய்” என்று கூறினார். யாக்கோபு அவருடைய பெயரைக் கேட்டவுடன், என்னுடைய பெயரை ஏன் கேட்கிறாய் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தார். அப்பொழுது தான் யாக்கோபுக்கு தான் தேவனை நேரடியாக பார்த்தது புரிந்தது. அதனால் அந்த இடத்திற்கு “பெனியேல்” என்று பெயரிட்டான்.

யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு தன் வாழ்நாள் முழுவதும் பலவிதங்களில் முயற்சித்திருந்தான். சில வேளைகளில் ஏமாற்றியும், பல வேளைகளில் கடினமாக  உழைத்தும் முயற்சித்தான். ஆனால் யாப்போக்கு ஆற்றின் கரையிலே ஆண்டவரை சந்தித்த பின் தான் யாக்கோபு உண்மையான ஆசீர்வாதத்தைப் பெற்றான்.

வேதபகுதி: ஆதியாகமம் 32

மனப்பாட வசனம்: கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். (நீதிமொழிகள்10:22)

Click this link to learn how to organize VBS / Retreats

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்  

1.      யாக்கோபை கொல்ல முயற்சித்தது யார்?

………………………………………

2.    யாக்கோபு ஆரானிலே யாருடைய வீட்டிற்கு போனான்? .…………………………….

3.    யாக்கோபு தனித்திருந்த ஆற்றின் பெயர் என்ன?

………………………………….

4.    யாக்கோபிற்கு கொடுக்கப்பட்ட புது பெயர் என்ன?

…………………………………..

5.    யாக்கோபு தான் தேவனைப் பார்த்த இடத்திற்கு என்ன பெயரிட்டான்? ………………………………….. 

காலியான இடத்தை நிரப்பவும்:

1.    ஏசாவிற்கு “…………………………..” என்கிற ஒரு சிறப்பு உரிமை கொடுக்கப்பட்டிருந்தது

2.    ………………………… வர வேண்டிய ஆசீர்வதங்களை யாக்கோபு எடுத்துக்கொண்டான்.

3.    ……………………….. யாக்கோபை பலமுறை ஏமாற்றினான்.  

4.    யாக்கோபுக்கு …………………………… ஏற்பட்டது.

5.    “இனி உன் பெயர் …………………………. எனப்படும், நீ தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டாய்” என்று கூறினார்.



No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...